இரவு 22:55
…………………………………………………
மீண்டும்
வருகிறான் கபோதி
பிணங்களைப் புசிக்க அவன்
வேகமாய் வருகிறான்
அதே
பாசிசப் புன்னகையுடன்
கொலை வெறி நிரம்பிய கரங்களில்
வாளேந்தி வருகிறான்
குறிகளையும், முலைகளையும், யோனிகளையும்
பிடுங்கிப் புசித்தவனை வென்று
நரபசியுடன் வருகிறான்
கொடுவிதியெழுதிய காலத்தில்
மீண்டும்
கபோதியின் வருகை நிகழ்ந்து விட்டதையெண்ணி
ஜனங்கள் அச்சமுற்று அழுகிறார்கள்
இன்னும் இன்னும்
கபோதிக்கு பசியிருப்பதால்
ஜனங்கள் பிணங்களில் இருந்து எழுந்துவிட்டார்கள்.