பிணந்தின்னிப் பறவைகள்
———————————
இப்போதெல்லாம் எங்கள் வானத்தில்
பிணந்தின்னிப் பறவைகள்
எம்முடல்களைத் தின்று
வாழிடங்களை
மரண ஓலங்களால் நிரப்புகிறது.
கொடுமைகளுக்கிடையே
குறுக்கீடு நிகழ்த்திட யாருமில்லை
உணர்வுகள் உடைந்து
எதிர்காலமே தொலைந்தவர்களாய் நாம்
எவருடைய உதட்டிலும் புன்னகையில்லை
நாற்காலி மனிதர்கள்
பிணந்தின்னிப் பறவைகளால் மேலும்
எங்கள் வானத்தை நிரப்புகிறார்கள்.
நன்றி : வார்ப்பு இணையத்தளம்