![for%20poster%20tamil[1] for%20poster%20tamil[1]](https://suthesam.files.wordpress.com/2009/11/for20poster20tamil11.jpg?w=570)
இரவுப் பொழுதுகளில்
எனது
அழகிய இரவுப் பொழுதுகளில்
கொடிய மிருகங்கள் வந்து போகின்றன….
எதிர்காலம் குறித்த தேசக் கனவுகளில்
அவை மேய்ந்துவிட்டுப் போகிறது
அவையிடம்
கண்கள் இல்லை
காதுகள் இல்லை
கூரிய பற்களும், நகங்களுமே இருந்தன
கூடவே கழுத்தில் கொல்லும் ஆயுதங்கள்; கொழுவியிருந்தன.
அவை
எனது ஆசைகளை, இலட்சியங்களை
சப்பித்துப்புகின்றன
என்னையே இரைமீட்டுகின்றன
தப்பித்துப் போகவிடாமல்
கபாலங்களாலும் முறிந்துபோன
எலும்புத் துண்டுகளாலும்
என்னைச் சுற்றி வேலிபோட்டு பயமுறுத்துகின்றன
இனி எல்லாப்; பொழுதுகளில்; இருந்து
மீண்டுபோக முடியாது போகும்
நன்றி : வீரகேசரி உயிர் எழுத்து